தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இட்லி கடை பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் மானேஜர் ஸ்ரேயாஸ், ‛‛நீங்க நல்லவரா இருங்க, ரொம்ப நல்லவராக இருக்காதீங்க. ஐ டி விங்கை கத்துக்கோங்க. ஒருத்தன் 10 பேரை எதிர்த்தால் அவன் வீரன். ஒருத்தனை 10 பேரை எதிர்த்தால் அவன் தலைவன். உங்களால வாழ்ந்தவங்க, நேருக்கு நேர் உங்களுடன் நடிச்சு மோதினால் ஓகே.. கம்யூட்டர் வெச்சு ஏதோ செய்றாங்க'' என மறைமுக சாடினார்.
அதே போல் தனுஷ் ஹேட்டர்ஸ் குறித்து பேசினார். ‛‛ஒரு 30 பேர் ஒரு கூட்டணி வெச்சு ஏதோ பண்ணுறாங்க'' என்றார். தனக்கு எதிராக சமூக வலைதளத்தில் சிலர் சதி செய்வது போல அவர் பேச்சு இருந்தது. தனுஷால் வாழ்ந்தவர்கள் என ஸ்ரேயாஸ் சொல்வது சிவகார்த்திகேயனையா? விக்னேஷ் சிவன், நயன்தாராவையா? அனிருத்தையா? என கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் மூவரும் தனுஷால் வளர்ந்தவர்கள். இப்போது நட்பில் இல்லாதவர்கள். இவர்களில் யாரை சொல்கிறார்கள். இவர்கள் தனுசுக்கு எதிராக செய்கிறார்கள் என்று பலர் கேட்கிறார்கள். இவர்கள் சோஷியல் மீடியாவில் தனுசுக்கு எதிராக ஆட்கள் வைத்து தவறான செய்தி, மீம்ஸ் பரப்புகிறார்களா அல்லது தனுஷ் தரப்பு இப்படி நினைத்து கொண்டு புலம்புகிறதா என்றும் கோலிட்டில் பேசப்படுகிறது.