தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன் மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாக ஒரு செய்தி சமீபத்தில் வெளிவந்தது. ஒரு விருது விழாவிலும் அது பற்றி கமல்ஹாசன் பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று விமான நிலையத்தில் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த் அது குறித்து பேசுகையில், “அடுத்து ரெட்ஜெயன்ட், ராஜ்கமல் பிலிம்ஸ் இரண்டு நிறுவனத்துக்கும் சேர்ந்து ஒரு படம் பண்ணப் போறேன். இன்னும் டைரக்டர் முடிவாகல. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு ஆசை. கரெக்டான கதை, கதாபாத்திரம் கிடைக்கணும். கிடைச்சா ஆக்ட் பண்ணுவேன்,” என்றார்.
ஆக, லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்தை இயக்குவார் என்று வந்த செய்திகள் பொய் என்பது ரஜினியின் பேச்சு மூலம் உறுதியாகி உள்ளது. சரியான கதை, கதாபாத்திரங்கள் அமைந்தால் மட்டுமே இருவரும் இணைந்து நடிப்பார்கள் எனத் தெரிகிறது.