தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படத்துக்கு இன்னமும் கதை, இயக்குனர் முடிவாகவில்லை. இதை ரஜினிகாந்த்தே வெளிப்படையாக சொல்லிவிட்டார். அதேசமயம், அந்த படத்தை லோகேஷ் இயக்க வேண்டாம், அவருக்கு அந்த வாய்ப்பை தர வேண்டாம், ரிஸ்க் என திரையுலகினரும், ரஜினி ரசிகர்களும் விரும்புகிறார்களாம்.
காரணம், லோகேஷ் இயக்கிய 'கூலி' படம் ரசிகர்களுக்கு திருப்தி இல்லை. சினிமாவில் வெற்றி தோல்வி சகஜம். 'பீஸ்ட்' என்ற தோல்விப்படம் கொடுத்த நெல்சன்தான், அடுத்து ரஜினியை வைத்து 'ஜெயிலர்' என்ற ஹிட் படத்தை கொடுத்தார். ஆனால், லோகேஷ் கதை வேறு. அவர் வன்முறை, ஆக்சன், கடத்தல், போதை விவகாரம் என குறிப்பிட்ட ஏரியாவில் சுற்றி வருகிறார்.
ரஜினியும், கமலும் இணையும்போது அந்த கதை இந்தியளவில் பேசப்படணும். இருவருக்கும் சமமான வாய்ப்பு தரப்படணும். குறிப்பிட்ட பட்ஜெட்டில் படம் எடுத்து முடிக்கப்படணும். பட்ஜெட் அதிகமானால் டேபிளில் லாஸ் ஆகும். ஆகவே, லோகேஷ் தவிர்த்து வேறு இயக்குனரை தேட வேண்டும், ரஜினி, கமல் என்ற இரண்டு பெரிய ஹீரோக்களுக்காக அந்த கதை எழுதப்படணும். அதில் ஏகப்பட்ட ஹீரோயிசம், கமர்ஷியல் விஷயங்கள் இருக்கணும். லோகேஷ் கதையில் இருவரும் கேரக்டராக இருக்கக்கூடாது என்பது பலரின் எண்ணமாக இருக்கிறது.
சரி, அப்படிப்பட்ட இயக்குனர் யார் என்றால் கே.எஸ்.ரவிக்குமார், எச்.வினோத், ராஜமவுலி, ஜீத்து ஜோசப், சிறுத்தை சிவா தொடங்கி பல தெலுங்கு, மலையாளம், ஹிந்தி இயக்குனர்கள் பெயர்களையும் பலர் சொல்ல, இந்த விஷயத்தில் இறுதி முடிவெடுக்க முடியாமல் ரஜினி, கமல் தவிக்கிறார்களாம். பல ஆண்டுகளுக்குபின் இந்த கூட்டணி உறுதியாக உள்ளது. இது பேச்சளவில் இல்லாமல், செயலுக்கு வர வேண்டும் என்பது பல சினிமா ரசிகர்களின் எண்ணமாகவும் இருக்கிறது.