தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

எம்.சுந்தர் இயக்கத்தில் அஜித் தேஜ், ஸ்ரீஸ்வேதா நடிப்பில் உருவாகி உள்ள படம் அந்த 7 நாட்கள். பாக்யராஜ் நடித்த அந்த 7 நாட்கள் படத்துக்கும், இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனாலும் இந்த படத்தில் பாக்யராஜ் நடித்து இருக்கிறார். நாய் கடியால் பாதிக்கப்பட்ட ஹீரோயின் ஸ்ரீஸ்வதாவுக்கு என்ன நடக்கிறது. ரேபிஸ் நோய் முற்றிய நிலையில் ஹீரோயின் பிழைத்தாரா என்ற ரீதியில் கதை நகர்கிறது. அந்த நோய் பாதிக்கப்பட்டவராக தத்ரூபமாக நடித்து இருக்கிறார் கோவையை சேர்ந்த ஸ்ரீஸ்வேதா.
இது குறித்து அவர் பேசுகையில் 'நடிக்க நல்ல வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்த நிலையில், இந்த கதை வந்தது. இப்படிப்பட்ட கேரக்டரா என சற்றும் யோசிக்கவில்லை. எனக்கு நடிக்க கிடைத்த நல்ல வாய்ப்பாக கருதி நடித்தேன். அதற்காக, அந்த நோய் பாதித்தவர்களின் வீடியோக்களை பார்த்து, நிறைய கற்றுக்கொண்டேன். அது கொடூரமான பாதிப்பு. அப்படி நடித்தை பார்த்து பலரும் பாராட்டியிருக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் தெரு நாய்களை ஒழிக்கபட வேண்டும் என்று சொல்லமாட்டேன். அதன் இனப்பெருக்கத்தை தடை செய்ய வேண்டும் என்பதே என் கருத்து, நானும் ஒரு நாய் வளர்க்கிறேன்' என்றார்.
ஒரு சூப்பர் பவர் மூலமாக, ஒருத்தர் கண்ணை பார்த்தே, அவர்கள் உடனே மரண அடைவார்களா? எப்போது அது நடக்கும் என்ற சக்தி ஹீரோவுக்கு கிடைக்கிறது. ஹீரோயின் கண்ணை பார்க்கும்போது அவர் 7 நாட்கள் மட்டுமே வாழ்வார் என தெரிகிறது. அந்த சமயத்தில் நாய்கடி காரணமாக ஹீரோயினுக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட, கொடைக்கானலுக்கு போய் அந்த பாதிப்பை குணப்படுத்தினாரா ஹீரோ என்ற ரீதியில் இந்த கதை நகர்கிறதாம்.