தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் உருவாகியுள்ள 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்காக அவர் ஊர் ஊராகச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழில் பேசியிருந்தார். மலையாள பத்திரிகையாளர்கள் தமிழில் பேசுவதை புரிந்து கொள்வார்கள். அதனால், அங்கு எந்த சர்ச்சையும் எழவில்லை.
ஹைதராபாத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வில் அவர் கன்னடத்தில் பேசினார். அது தெலுங்கு ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. தெலுங்கில் பேசாமல் ஏன் கன்னடத்தில் பேச வேண்டும் என்று கோபப்பட்டார்கள்.
நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் ஹிந்தியில்தான் பேசினார். அப்போது கன்னடத்தில் பேசியது குறித்து எழுந்த சர்ச்சைக்கு அவர் விளக்கம் அளித்தார்.
“நான் கன்னடத்தில் சிந்திக்கிறேன், அதனால் கன்னடத்தில் பேசுகிறேன். ஆனால், புதிய மொழிகளை கற்றுக் கொள்ள விரும்புகிறேன். ஒரு இடத்திற்கு சென்று பேசும்போது, அந்த நிலத்தின் மொழியை அவமரியாதை செய்யக்கூடாது. ஆனால், சில சமயங்களில் அது தவறாக நிகழ்ந்துவிடுகிறது. ஆனால், நான் ஒரு பெருமையான கன்னடிகர், கன்னடத்தில் சிந்திப்பேன், பேசுவேன், எழுதுவேன். அதேபோல், கன்னடத்தை மதிக்கும்போது, மற்ற மொழிகளையும் சமமாக மதித்து அன்பு செய்கிறேன். எல்லா மொழிகளையும் மதிக்கிறேன், எல்லா மொழிகளின் அடிப்படை எப்போதும் ஒன்றே. மற்ற மொழிகளை பேசுவதில் முயற்சி செய்வேன்,” எனப் பேசியுள்ளார்.