தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் மோகன்லால் மலையாள திரையுலகில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக தனது திரையுலக பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவருக்கு பின் எத்தனையோ இளம் நடிகர்கள் வந்த பின்னரும் கூட, தற்போது வரை நம்பர் ஒன் இடத்திலேயே தொடர்ந்து பயணித்து வருகிறார். பல்வேறு விதமான கதையம்சம் கொண்ட படங்களிலும், கதாபாத்திரங்களிலும் நடித்து தேசிய விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவரது திரையுலக பயணம், வாழ்நாள் சாதனை ஆகியவற்றை பாராட்டி கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு இந்தியாவில் மிக உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தது.
இதன்மூலம் கேரளாவிற்கு மலையாள திரையுலகிற்கு மிகப்பெரிய கவுரவத்தை பெற்று தந்த மோகன்லாலுக்கு மிக பிரம்மாண்டமான விழா எடுத்து கவுரவிக்க இருக்கிறது கேரள அரசு. இந்த விழா வரும் அக்டோபர் நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை லால் சலாம் என்கிற தலைப்பில் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் கேரள கலை மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் சாஜி செரியன்.