தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

1950களில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் பல படங்கள் தயாரானது. அதே நேரத்தில் பெங்காலி மொழி திரைப்படங்கள் பல ரீமேக் செய்யப்பட்டது. பெங்காலி நாடகங்கள் தமிழ் சினிமா ஆனது. முதன் முறையாக தமிழ் மற்றும் பெங்காலியில் தயாரான 'ரத்னதீபம்', பெங்காலி டைட்டில் 'ரத்னதீப்'.
தீபகி போஸ் என்ற பெங்கலாலி இயக்குனர் இயக்கி, தயாரித்தார். அபி பட்டாச்சார்யா, அனுபமா, சன்யல், சாயாதேவி நடித்தனர். ரூபின் சட்டர்ஜி இசை அமைத்திருந்தனர்.
ஒரு பெரிய கோடீஸ்வர வீட்டின் வாரிசு திடீரென காணாமல் போகிறான். இதை தெரிந்து கொள்ளும் ஒருவன் தான்தான் காணாமல்போன வாரிசு என்று அந்த குடும்பத்திற்குள் நுழைகிறான். ஒரு கட்டத்தில் அவர்கள் காட்டும் அன்பில் திளைக்கும் அவன் உண்மையை சொல்லிவிடுகிறான். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இதேபோன்ற கதை பின்னாளில் நிறைய படங்களில் வந்தது. படம் இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்றது.