தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடிப்பில் 'பாகுபலி 1, 2' ஆகிய படங்கள் வெளிவந்து வசூலில் சாதனை படைத்தன. அதன் பிறகுதான் பல சரித்திரப் படங்கள் இந்திய சினிமாவில் உருவாக ஆரம்பித்தன. அந்த இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே படமாக்கி 'பாகுபலி த எபிக்' என்ற பெயரில் அக்டோபர் 31ம் தேதி வெளியிட உள்ளார்கள். அதன் முடிவில் 'பாகுபலி 3' படத்திற்கான அறிவிப்பு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அப்படி எதுவும் இடம் பெறவில்லை என தயாரிப்பு நிறுவனம் பதிலளித்துள்ளதாகத் தெரிகிறது.
இப்போதைய சூழலில் 'பாகுபலி 3' உருவானால், அதற்காக குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது தேவைப்படும். பிரபாஸ் தற்போது அடுத்தடுத்து பான் இந்தியா படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவற்றை முடிக்கவே இன்னும் நான்கைந்து ஆண்டுகள் ஆகும். மேலும், 'பாகுபலி 2' படத்தின் மொத்த பட்ஜெட்டில் 20 சதவீதம் மட்டுமே நடிகர்களின் சம்பளமாகக் கொடுக்கப்பட்டது என சமீபத்திய பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதே அளவிலான சம்பளத்தில் மீண்டும் பிரபாஸ் நடிக்க சம்மதிப்பார் என்பதெல்லாம் நடக்காத ஒன்றாகவே இருக்கும். அடுத்து, தனது கனவுப் படமாக 'மகாபாரதம்' படத்தை எடுக்க வேண்டும் என்ற ஏற்கெனவே சொல்லி இருக்கிறார் ராஜமவுலி. ஒருவேளை அதில் இறங்கினால் அதற்காக அவர் ஐந்தாறு வருடங்களாவது செலவிட வேண்டி இருக்கும். எனவே, 'பாகுபலி 3' என்பது எதிர்காலத்தில் உருவாகுமா என்பது சந்தேகம்தான்.