தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ் சினிமாவில் இரண்டு படங்களிலேயே முன்னணி இளம் நடிகர் வரிசைக்கு உயர்ந்துள்ளார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் தற்போது அவர் கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடித்துள்ள 'டியூட்' திரைப்படம் வரும் தீபாவளி ரிலீஸ் ஆக நாளை மறுநாள் (அக்.,17) வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்க, முக்கிய வேடத்தில் சரத்குமார் நடித்துள்ளார்.
சமீபத்தில் இதன் தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் படக்குழுவினர் கலந்து கொண்டபோது அங்கே செய்தியாளர்களில் ஒருவர் நீங்கள் ஹீரோ மெட்டீரியல் இல்லையே என்று ஒரு சர்ச்சையான கேள்வியை முன் வைத்தார். இது குறித்து பிரதீப் ரங்கநாதன் அமைதியாக பதில் அளித்து கடந்து சென்று விட்டாலும் அந்த சந்திப்பில் சரத்குமார் அவருக்கு ஆதரவாக பேசினார். இதை தொடர்ந்து இன்னும் சில பிரபலங்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கு புரமோஷனில் ஒரு பகுதியாக நடிகர் நாகார்ஜுனா நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் பிரதீப் ரங்கநாதன். அப்போது இந்த ஹீரோ மெட்டீரியல் சர்ச்சைக்கு பதில் அளிக்கும் விதமாக அவருக்கு ஆதரவாக பேசிய நாகார்ஜுனா, “சில தலைமுறைகளுக்கு முன்பு ஒரு தீப்பொறி போல சினிமாவிற்குள் நுழைந்து அதன் போக்கையே ஒருவர் மாற்றினார். அவர் பெயர் ரஜினிகாந்த்.. அதன்பிறகு அதேபோல சில வருடங்களுக்கு முன்பு இன்னொரு தீப்பொறி போல ஒருவர் நுழைந்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார். அவர் பெயர் தனுஷ். இன்னும் சில வருடங்கள் கழித்து இதோ தற்போது நான் பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன்” என்று கூறினார்.
அவரது பேச்சால் நெகிழ்ந்து போன பிரதீப் ரங்கநாதன், “சார் இது உண்மையிலேயே மிகப்பெரிய வார்த்தைகள்.. அதுவும் உங்களிடமிருந்து இந்த வார்த்தைகள் வரும்போது இந்த உலகமே எனக்கு என்பது போல தோன்றுகிறது” என்று கூறினார்.