தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கர்நாடக மாநில கூர்க் அழகியான ராஷ்மிகா மந்தனா, கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் புகழ் பெற்றவர். சுல்தான், வாரிசு உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 'கன்னட சினிமாவில் அறிமுகமானாலும் என்னை உருவாக்கியது தெலுங்கு திரையுலகம்தான்' என பேட்டியளித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் கன்னட படங்களில் அவரை நடிக்க வைக்கக் கூடாது என கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதோட கூர்க் பழங்குடி இனத்திலிருந்து நடிக்க வந்த முதல் நடிகை நான்தான் என்றும் ஒரு பேட்டியில் கூற அதுவும் சர்ச்சையாகி, உங்களுக்கு முன்பே நிறைய பேர் சாதித்திருக்கிறார்கள் என்று ஆதாரத்தோடு தகவல்களை வெளியிட்டனர்.
இந்த பிரச்சினைகளை தொடர்ந்து அவர் கன்னட படத்தில் நடிப்பதுமில்லை, நடிக்க யாரும் அழைப்பதுமில்லை. இதுகுறித்து ராஷ்மிகா மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் "தொழில்முறை விமர்சனம் வரவேற்கத்தக்கது. ஆனால் தனிப்பட்ட அவதூறுகள் தவறு. நாம் மாற்றிக் கொள்ள வேண்டியதை சொன்னால் அதைக் கருத்தில் கொண்டு வேலை செய்வோம். யார் எனக்கு தடை விதிக்கிறார்களோ அவர்களிடம் சென்று ஏன் அவருக்கு தடை விதிக்கிறீர்கள், அவர் என்ன தவறு செய்தார் என்று கேளுங்கள்''.
இவ்வாறு ராஷ்மிகா கூறியுள்ளார்.