தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இருந்து சுந்தர்.சி விலகிவிட்டார். இந்த விலகலுக்கு பணப்பிரச்னைதான் காரணம் எனக் கூறப்பட்டது. சுந்தர்.சியின் சம்பளத்தை கமல் தரப்பு ஏற்கவில்லை. பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் சுந்தர்.சி தயாரிக்க நினைத்தார், அதற்கு ராஜ்கமல் நிறுவனம் சம்மதிக்கவில்லை என கூறப்பட்டது. ஆனால், சுந்தர்.சி விலகலுக்கு பணப்பிரச்னை அல்ல, கதை செட்டாகவில்லை. என் ஹீரோ ரஜினிக்கு கதை பிடிக்க வேண்டும் என்று ஓபனாக சொல்லிவிட்டார் கமல். இதனால் சுந்தர்.சி சொன்ன கதைகள் ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
இவ்வளவு வெற்றி படங்கள் கொடுத்த சுந்தர்.சி கதை விஷயத்தில் சொதப்புவாரா? அப்படியே சில கதைகள் ரஜினிக்கு பிடிக்காவிட்டாலும், வேறு கதைகளை அவர் தயார் செய்ய மாட்டாரா? சுந்தர்.சி விலகலுக்கு கதை பிரச்னை காரணமா? வேறு பிரச்னையா? இது குறித்து சுந்தர். சி விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும் என பலர் எதிர்பார்க்கிறார்கள்.
இதற்கிடையே, 'மகாராஜா' படத்தை இயக்கிய நித்திலன் லேட்டஸ்ட்டாக ரஜினியை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். இன்னும் சில இயக்குனர்களும் கதையுடன் ரஜினியை அணுகி இருக்கிறார்களாம். வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி, ரஜினியின் 75வது பிறந்தநாளுக்குள் கதை முடிவாகி, அவர் பிறந்தநாளில் அந்த பட அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.