ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

ரஜினி முருகன், ரெமோ, சீமராஜா ஆகிய 3 படங்களில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். அந்த காலத்தில் இந்த ஜோடி வெற்றி கூட்டணியாக பேசப்பட்டது. இப்போது சிவகார்த்திகேயன் வேகமாக வளர்ந்துவிட்டார். இந்த வளர்ச்சி குறித்து கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறுகையில் 'நானும் அவரும் ஒன்றாக வளர்ந்தோம். 3 படங்களில் நடித்தோம். டிவியில் இருந்து வந்தவர் சிவகார்த்திகேயன். பின்னர், சினிமாவில் என்ட்ரியாகி கடுமையாக உழைத்து கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறார். நாங்கள் இருவரும் ஒன்றாக நடித்தோம். இன்றும் எங்கள் படங்கள் குறித்து மக்கள் பேசுவது மகிழ்ச்சி'' என்றார்.
மேலும் அவர் கூறுகையில் ''கல்யாணி பிரியதர்ஷன் வளர்ச்சியும் சந்தோசமாக இருக்கிறது. அவர் தந்தை பிரியதர்ஷன்தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். நானும் கல்யாணியும் நல்ல நட்பில் இருக்கிறோம், லோகா படம் பார்த்துவிட்டு அவரை பாராட்டினேன். தென்னிந்தியாவில் அதிக வசூல் செய்த ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் லோகா இடம் பெற்றுள்ளது பெருமை.
இப்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள நிறைய வருகின்றன. ஆனால், ஹீரோயின்களுக்கு சம்பளம் குறைவுதான். அவர்கள் நடிக்கும் படம் பிஸினஸ் ரீதியாக பல கோடி வசூலித்து, நல்ல லாபத்தை கொடுத்தால் அவர்கள் சம்பளமும் அதிகரிக்கும். என் அப்பா தயாரிப்பாளர் என்றாலும், எனக்கு படம் தயாரிப்பில் ஆர்வம் இல்லை' என்றார்.