டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

போயபதி சீனு இயக்கத்தில், பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியாக வேண்டிய தெலுங்குத் திரைப்படம் 'அகண்டா 2'. ஈராஸ் நிறுவனத்திற்கு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தர வேண்டிய பழைய கடன் தொகை பாக்கிக்காக சென்னை உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. அதனால், படத்தை அறிவித்தபடி நேற்று வெளியிடமுடியவில்லை.
இந்நிலையில் படத்தைத் தள்ளி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது. அது குறித்து அவர்களது எக்ஸ் தளத்தில், “நாங்கள் 'அகண்டா 2' படத்தை பெரிய திரைகளுக்குக் கொண்டு வர எங்கள் முழு முயற்சியையும் செய்தோம், ஆனால் எங்கள் அயராத முயற்சிகள் இருந்தபோதிலும், சில சமயங்களில், மிகவும் எதிர்பாராத விஷயங்கள் நடக்கின்றன, மற்றும் துரதிர்ஷ்டவசமாக, இது அந்த நேரமாக அமைந்தது.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் மற்றும் சினிமா பிரியர்களுக்கும், படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆவலுடன் காத்திருந்தவர்களுக்கும், நாங்கள் மனமார்ந்த மன்னிப்பு கோருகிறோம். இந்த சவாலான தருணத்தில் எங்களுடன் நின்ற எங்கள் அன்பான 'மக்களின் கடவுள்' பாலகிருஷ்ணா காரு மற்றும் போயபாடி சீனு காரு ஆகியோருக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
அகண்டா 2, எப்போது வந்தாலும் இலக்கைத் தாக்கும்… புதிய தேதியுடன் விரைவில் வருகிறது” என்று அறிவித்துள்ளார்கள்.