தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாளத்தில் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தில் இருந்து இப்போதைய மூன்றாம் பாகம் வரை மோகன்லால், மீனா, போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்த ஆஷா சரத் ஆகியோர் தொடர்ந்து இடம் பிடித்து வருகின்றனர்.
அதேசமயம் கடந்த இரண்டாம் பாகத்தில் பிரபல மலையாள நடிகரான முரளி கோபி ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக படத்தில் புதிதாக இணைந்திருந்தார். ஒரு நாவலாசிரியர் கதாபாத்திரத்தில் நடிகர் சாய்குமார் கதைக்கு திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த மூன்றாம் பாகத்தில் தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மோகன்லாலுடன் இவர் படப்பிடிப்பின் போது இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன் 'ஜெயிலர்' படத்தில் இவர்கள் இருவரும் நடித்திருந்தாலும் ஒரு காட்சியில் கூட இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.