லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் செல்வராகவன். தற்போது தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இது தவிர சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை சோனியா அகர்வாலை சட்டப்படி பிரிந்த பின்னர் மயக்கம் என்ன படத்தில் தன்னுடன் பணிபுரிந்த உதவி இயக்குனர் கீதாஞ்சலி என்பவரை 2011ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கர் என்ற மகனும் உள்ள நிலையில் கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பமானார். கர்ப்பகாலத்தில் விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தினார் கீதாஞ்சலி. சமீபத்தில் புத்தாண்டையும் வெகு சிறப்பாக கொண்டாடினார். இந்நிலையில் இன்று(ஜன., 7) காலை செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிக்கு 3வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ரிஷிகேஷ் என பெயரிட்டுள்ளனர். தாயும், சேயும் நலமாக உள்ளனர். இந்த தம்பதியருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.