துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
சென்னை : தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி கொடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த முடிவை திரும்ப பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 50 சதவீத இருக்கைக்கு அனுமதி தொடரும் என தெரிவித்துள்ளது.
கொரோனா பிரச்னையால் மூடப்பட்ட தியேட்டர்கள் தீபாவளியை ஒட்டி தமிழகத்தில் 50 சதவீதம் இருக்கைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் புதிய படங்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகததால் மக்கள் தியேட்டருக்கு செல்ல விருப்பம் காட்டவில்லை. இதை 100 சதவீதமாக உயர்த்த தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் கோரிக்கை வைத்தனர். பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் வெளியாவதால் இந்த கோரிக்கை மேலும் அதிகமானது. நடிகர் விஜய் கூட முதல்வரை சந்தித்து இது விஷயமாக பேசினார்.
இதையடுத்து 100 சதவீதம் இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதை திரையுலகினர் வரவேற்றாலும் பொது மக்கள் மத்தியிலும், டாக்டர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மத்திய அரசு இது தவறு என சுட்டிக்காட்டியது. இது சம்பந்தமாக சென்னை ஐகோர்ட், மதுரை ஐகோர்ட் கிளையில் தொடரப்பட்ட வழக்கிலுமே தமிழக அரசு இப்படி செய்தது தவறு என கூறப்பட்டுள்ளது. இந்த முடிவை அரசு திரும்ப பெற வேண்டும் என என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருப்பதாவது: தியேட்டர்களில் இருக்கை சம்பந்தமாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதாலும் , மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி தியேட்டர்களுக்கு வழங்கப்பட்டிருந்த100 சதவீத இருக்கைக்கு அனுமதி என்பது வாபஸ் பெறப்படுகிறது. ஐகோர்ட் உத்தரவின் படி தியேட்டர்களில் கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ளலாம். மேலும் முக கவசம் அணிவது, தனி நபர் இடைவெளியை கடைபிடிப்பது அவசியமாகும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.