தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு கிடந்தது. ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக 50 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அரசு அனுமதித்தது. ஆனால் தியேட்டர்களில் பெரிய படங்கள் வெளிவரவில்லை. மக்களும் தியேட்டருக்கு ஆர்வமாக செல்லவில்லை.
இந்த நிலையில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13ந் தேதி மாஸ்டர் படம் வெளிவருவதால் விஜய்யின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி அளித்தது. பல்வேறு தரப்பின் எதிர்ப்புகளை தொடர்ந்து இந்த அறிவிப்பை வாபஸ் பெற்றது. இந்த நிலையில் கமல்ஹாசன் அரசின் 50 சதவிகித இருக்கை முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு நேற்று சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இதுகுறித்து கூறும்போது "தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைக்கு மட்டும் அனுமதி அளித்திருப்பது ஆரோக்கியமான முடிவு. தொழிலும் நடக்க வேண்டும், அதே நேரத்தில் மக்களின் ஆரோக்கியமும் முக்கியம். எனவே இந்த முடிவு, நல்ல முடிவு. இதனை நான் வரவேற்கிறேன். என்றார்.