சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு கிடந்தது. ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக 50 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அரசு அனுமதித்தது. ஆனால் தியேட்டர்களில் பெரிய படங்கள் வெளிவரவில்லை. மக்களும் தியேட்டருக்கு ஆர்வமாக செல்லவில்லை.
இந்த நிலையில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13ந் தேதி மாஸ்டர் படம் வெளிவருவதால் விஜய்யின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி அளித்தது. பல்வேறு தரப்பின் எதிர்ப்புகளை தொடர்ந்து இந்த அறிவிப்பை வாபஸ் பெற்றது. இந்த நிலையில் கமல்ஹாசன் அரசின் 50 சதவிகித இருக்கை முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு நேற்று சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இதுகுறித்து கூறும்போது "தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைக்கு மட்டும் அனுமதி அளித்திருப்பது ஆரோக்கியமான முடிவு. தொழிலும் நடக்க வேண்டும், அதே நேரத்தில் மக்களின் ஆரோக்கியமும் முக்கியம். எனவே இந்த முடிவு, நல்ல முடிவு. இதனை நான் வரவேற்கிறேன். என்றார்.