ஜன. 30ல் திரைக்கு வரும் ‛தலைவர் தம்பி தலைமையில்' | 'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ் | ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில் | ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் தீர்ப்பு; 'ஜனநாயகன்' ஜன.9ல் வெளியாகுமா? | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி |

சுசீந்திரன் இயக்கத்தில், சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்துள்ள 'ஈஸ்வரன்' பட வெளியீடு தொடர்பாக கடந்த சில நாட்களாக குழப்பம் நிலவி வந்தது.
தமிழ்நாட்டில் தியேட்டர்களில் படம் வெளியாகும் அன்றே வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியீடு என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இங்குள்ள தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அந்த அறிவிப்பில் இருந்து பின்வாங்கினார்கள்.
அடுத்து சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தனக்கு நஷ்ட ஈடாக சிம்பு தர வேண்டிய முதல் தவணை 2.4 கோடியை இந்தப் படத்தில் தர வேண்டும், அதைத் தரவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், படத்தின் டிஜிட்டல் கன்டென்ட்டை தியேட்டர்களுக்கு அனுப்பும் க்யூப் நிறுவனம் இப்பட வேலையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியது. அந்தக் கடித விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றே தெரிகிறது.
இதனிடையே, சிம்பு விவகாரம் குறித்து இன்று கூடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள், இனி சிம்பு படத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனாலும், படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டி கம்பெனி படத்தை டிஜிட்டல் மாற்றத்திற்காக 'லோட்' செய்துவிட்டதாக டுவீட் செய்துள்ளது.
பட வெளியீடு தொடர்பாக இத்தனை சிக்கல்கள் இருந்தாலும் படம் நாளை தியேட்டர்களில் எப்படியும் வெளியாகிவிடும் என்றே கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.