இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரையும் இணைத்து, ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி. இந்தப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி உருவாகிகிறது. இதில் கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க, ராமராஜு கதாபாத்திரத்தில் ராம்சரண் நடிக்கிறார்.
கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு காரணமாக இடையில் சில மாதங்கள் நிறுத்தப்பட்டிருந்த இந்தப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை இன்று(ஜன., 19) முதல் படமாக்க துவங்கியுள்ளார் ராஜமவுலி.
ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் இருவரும் ஒருவர் கையை ஒருவர் இறுக்கி பிடித்தபடி, கைகள் மட்டுமே தெரியும்படியான புகைப்படத்தை மட்டும் பகிர்ந்து கொண்டுள்ள இயக்குனர் ராஜமவுலி, “என்னுடைய ராமராஜுவும் பீமும் எதை அடைவதற்கு விரும்பினார்களோ, அதை சாதிப்பதற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப்படம் ஆங்கிலேயர் காலகட்டத்தில் நிகழும் கதை என்பதாலும் இந்த புகைப்படத்தின் பின்னணியில் ஆங்கிலயேர் கொடியும் ஏதோ ஒரு போட்டியை வேடிக்கை பார்க்கும் விதமாக காலரியில் அமர்ந்திருக்கும் கூட்டத்தையும் பார்க்கும்போது இது சண்டைக்காட்சி அல்லது பந்தய காட்சியாக இருக்கும் என்றே தெரிகிறது..