தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ்குமார் மலையாளத்தில் பிரபலமான ஒரு தயாரிப்பாளர். சிறு வயதில் தன் அப்பா தயாரித்த சில படங்களில் கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்திலும், தனது அப்பாவின் தயாரிப்பிலும் 'வாஷி' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
அது பற்றி கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளதாவது, “நீங்கள் நினைப்பதைவிட என் மனதிற்கு நெருக்கமான ஒரு படம். ஒரு பெண் குழந்தையாக, அப்பாவின் தயாரிப்பில் நடிப்பது சுலபம் என நினைத்துவிடலாம், ஆனால் எதுவும் சுலபமாக வருவதில்லை.
எனது சிறு வயது நண்பர் விஷ்ணு ராகவ் இந்த முறை என்னுடன் எனது இயக்குனராகப் பணிபுரிகிறார். எனது அபிமான மற்றும் சிறந்த நடிகரான டொவினோ தாமஸ் உடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி,” என கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தமிழில் 'அண்ணாத்த, சாணிக் காயிதம்' படத்திலும், தெலுங்கில் 'ரங் தே, சரக்கு வாரி பாட்டா, அய்னா இஷ்டம் நுவ்வு' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். 'குட் லக் சகி' தெலுங்குப் படத்திலும், 'மரைக்கார்' மலையாளப் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.