தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து இயக்கி உள்ள படம் 'கர்ணன்'. தனுஷ் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகையான ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, லால் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இதனிடையே, இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படம் பற்றி ஒரு அப்டேட்டைக் கொடுத்திருக்கிறார். “கர்ணன், பார்த்தேன், திகைத்துப் போனேன். உங்களைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன் தனுஷ். இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு மற்றும் சிறப்பான குழுவினர். கர்ணன், அனைத்தும் கொடுப்பான்” எனப் பாராட்டியுள்ளார்.
தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படம் வெளிவந்ததும், 'கர்ணன்' வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.