விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு |

கொரோனாவால் கடந்தாண்டு வெளியாக வேண்டிய பல படங்கள் இந்தாண்டு வரிசைக்கட்டி நிற்கின்றன. இதனால் ரிலீஸில் பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. பாகுபலி படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கத்தில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்'. ராம் சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் சுதந்திர போராட்ட கதையில் உருவாகி வருகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
சில தினங்களுக்கு இப்படம் அக்., 13ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இது ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூரை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. காரணம் அவரது தயாரிப்பில் அஜய் தேவ்கன் நாயகனாக நடித்துள்ள 'மைதான்' படம் அக்., 15ல் வெளியாவதாக முன்பே அறிவிக்கப்பட்டது.
இதுபற்றி போனி கபூர், ''கொரோனா காலத்தில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும். ஆனால் திரையுலகில் அப்படி இல்லை. இரண்டு பெரிய படங்கள் ஓரிரு நாள் இடைவெளியில் வருவது விரும்பத்தகாத நிகழ்வு. இரண்டு படத்திற்கும் தேவையில்லாத குழப்பங்களும் வரும், தியேட்டர் உள்ளிட்ட பிரச்னைகளும் வரும். இதனால் வினியோகஸ்தர்களும் பாதிக்கப்படுவார்கள். ராஜமவுலியிடம் பேசியபோது, தயாரிப்பாளர் தான் ரிலீஸ் தேதி முடிவு செய்கிறார், என்றார்' என குறிப்பிட்டுள்ளார்.