பிளாஷ்பேக் : லலிதா பத்மினிக்காக உருவான நாவல் | ஜெயிலர் 2வில் வசந்த் இருக்கிறாரா? | அக்டோபர் முதல் பிக்பாஸ் சீசன் 9 : இந்தமுறை தொகுத்து வழங்குவது கமல்ஹாசனா? விஜய் சேதுபதியா? | ரூ.151 கோடியைக் கடந்த 'கூலி' முதல்நாள் வசூல் : லியோ சாதனை முறியடிப்பு | இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான் : கங்கை அமரன் பரபரப்பு பேச்சு | நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார் | ‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டதும் விஜய் நடித்த 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் தான் ரீஎன்ட்ரி ஆனார். அந்தப் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
தற்போது 'ஆச்சார்யா' என்ற நேரடித் தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. அதற்கடுத்து மலையாள 'லூசிபர்' ரீமேக், தமிழ் 'வேதாளம்' ரீமேக் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். இதனிடையே, அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்க ஆர்வமாக உள்ளாராம். அப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ஏற்கெனவே சிரஞ்சீவியின் தயாரிப்பு நிறுவனம் தான் வாங்கி வைத்துள்ளதாம்.
தற்போது திட்டமிட்டுள்ள படங்களை முடித்துவிட்டு அந்தப் படத்தைச் செய்யலாம் என யோசித்து வருகிறாராம். நேரடிப் படங்களை விட ரீமேக் படங்கள் கொஞ்சம் சிக்கல் இல்லாமல் இருக்கும் என்பதுதான் அதற்குக் காரணம் என்கிறார்கள்.