கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் | 50 ஆண்டு சினிமா பயணம் : ரஜினிக்கு அந்த ஒரு ஏக்கம் மட்டுமே...! | ராம் சரணின் அலைப்பேசி எண்ணை அவர் மனைவி எப்படி பதிந்து வைத்துள்ளார் தெரியுமா? | விவாகரத்து, கேன்சர் : இரண்டு வருட போராட்டத்தில் மம்முட்டியின் கதாநாயகி | பிளஷ்பேக் : குண்டு கல்யாணத்தை தெரியும், குண்டு கருப்பையாவை தெரியுமா? |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கடந்த சில நாட்களாகவே திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் வெளியாக வேண்டிய படத்தை இத்தனை நாட்களாக தியேட்டர் வெளியீடு என காத்திருக்க வைத்துவிட்டு, தற்போது ஓடிடியில் வெளியிட வேண்டிய காரணம் என்ன என திரையுலகத்திலேயே கேள்வி எழுப்புகிறார்கள்.
படத்தை ஓடிடியில் வெளியிடுவதை தனுஷ், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் விரும்பவில்லை என்றே தெரிகிறது. இந்நிலையில் தனுஷ் டுவிட்டரில், ''தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா பிரியர்கள் மற்றும் எனது ரசிகர்கள் அனைவரையும் போன்று நானும், ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் வெளியாகும் என நம்புகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.