மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் | ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் | நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் | 65 ஆயிரம் கேட்ட பஹத் பாசிலுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன் : தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் | 'கேம் சேஞ்ஜர், ஹரிஹர வீர மல்லு' தோல்விகள் தரும் பாடம் என்ன? | தமிழ் சினிமாவின் 2025 வறட்சியை மாற்றுமா 'கூலி' | கதை பேசப்படணும், அதனல நடித்தேன் : காயல் பட அனுபவம் குறித்து அனுமோல் | இதுவரை நடித்திராத கேரக்டரில் சுனில் : கண் பார்வையற்றவராக நடிக்கும் ஹீரோ | முதல் நாள் சாதனை வசூலை நோக்கி 'கூலி' | அயோத்தி, பார்க்கிங், மகாராஜா, லப்பர் பந்து இயக்குனர்களின் அடுத்த படம்? |
தெலுங்கு திரையுலகில் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் முக்கிய நடிகர் மகேஷ் பாபு. பிரபல நடிகர் கிருஷ்ணாவின் மகனாக, ஒரு வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தாலும் தனது திறமையால் முன்னணி இடத்திற்கு உயர்ந்தவர் மகேஷ்பாபு. குறிப்பாக இப்போது வரை ஆக்சன் ரூட்டை விட்டு நகராமல் தொடர்ந்து அதில் பயணித்து வருகிறார். அவரது 39வது படமாக தற்போது ராஜமவுலி இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்று அவர் தனது ஐம்பதாவது பிறந்தநாளை தொட்டுள்ளார். வயது தான் 50 ஆகிறதே தவிர நாளுக்கு நாள் ஒரு கல்லூரி மாணவரின் தோற்றத்திற்கே மாறிக் கொண்டிருக்கும் மகேஷ் பாபு குறித்து தனது பிறந்த நாள் வாழ்த்துத் செய்தியில் அதே கருத்தை வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சிரஞ்சீவி இது குறித்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நீங்கள் தெலுங்கு சினிமாவின் பெருமை. எல்லைகளுக்கு அப்பால் வெற்றிகளை பெற தீர்மானிக்கப்பட்டவர். ஒவ்வொரு வருடமும் கடந்து செல்லும்போது இன்னும் இளமையாகிக் கொண்டு செல்கிறீர்கள். இந்த வருடம் உங்களுக்கு மிக அற்புதமான ஒன்றாக அமையட்டும்” என்று வாழ்த்தி உள்ளார்.
நடிகர் ஜூனியர் என்டிஆரும் வாழ்த்தும்போது, “பிறந்தநாள் வாழ்த்துகள் மகேஷ் பாபு அண்ணா.. உங்களது வெற்றிக்காக அன்புடன் வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார். இதேபோல பல தெலுங்கு திரையுலக பிரபலங்களும் மகேஷ் பாபு தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.