ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் |
நடிகை நதியா திரையுலகில் நுழைந்து 37 வருடங்கள் ஆகின்றன. இவரை மலையாளத்தில், “நோக்கத்தே கண்ணெட்டும் தூரத்து' என்கிற படம் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாசில். அந்தப்படத்தை தமிழில் 'பூவே பூச்சூடவா' என ரீமேக் செய்தபோதும் நதியாவே நடித்தார். இந்த இரண்டு படங்களை தொடர்ந்து நதியாவின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது. நேற்று தனது குருவான பாசிலின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் நதியா.
தனது சோஷியல் மீடியா பக்கத்தில், பூவே பூச்சூடவா படத்தில் பணிபுரிந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள நதியா இதுகுறித்து கூறும்போது, “இயக்குனர் பாசில் என்னைப் பொறுத்தவரை எப்போதுமே பாசில் அங்கிள் தான்.. மிகப்பெரிய பொழுதுபோக்கு உலகத்திற்குள் நுழையும் விதமாக என் கண்களை திறந்து விட்டவர். 17 வயதில் சாதாரண ஜரீனாவாக இருந்த என்னை நதியாவாக மாற்றினார்.. அவரது இயக்கமும் வழிகாட்டுதலும் தான் ரசிகர்கள் மனதில் பதியும் விதமான கதாபாத்திரங்களை எனக்கு கிடைக்க செய்தது” என நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்.