ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
புச்சி பாபு சனா இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வைஷ்வ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த தெலுங்குப் படம் 'உப்பெனா'.
இப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தெலுங்குத் திரையுலகத்தில் ஒரு புதுமுகம் நடித்து வெளிவந்த படம் கொரானோ காலகட்டத்திலும் ரூ.100 கோடி வசூலித்தது சாதாரண விஷயமல்ல என்ற மகிழ்ச்சியில் இருக்கிறது தெலுங்குத் திரையுலகம்.
இப்படத்தைப் பார்த்த மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டினர்.
தியேட்டர் வசூலில் மட்டும் ரூ.100 கோடியைக் கடந்த இப்படத்தின் ஓடிடி உரிமை கூட பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. படத்தில் அறிமுகமான வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி ஆகியோருக்கு பல புதிய பட வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் நடிகரான விஜய் சேதுபதியும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார். அவரைத் தேடியும் பல தெலுங்குப் பட வாய்ப்புகள் வருகிறதாம்.
தெலுங்குத் திரையுலகில் கொரானாவிற்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் வெளியான ஒரு படம் ரூ.100 கோடி வசூலைப் பெறுவது இதுவே முதல் முறை.