ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இடம் பிடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்து தன்னுடைய நடிப்பு எல்லையை விரிவாக்கி வருகிறார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இதற்கு முன்பு தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த 'சைரா' என்ற படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அடுத்து தெலுங்கில் நேற்றுமுன்தினம் வெளியான 'உப்பெனா' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அறிமுக நடிகர்களான வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி நாயகன் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு முன்னணி நடிகர்களுக்கு உண்டான வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
முதல் நாளில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். நேற்று, இன்றும் விடுமுறை தினம் என்பதால் அடுத்த இரண்டு நாட்களிலேயே இந்தப் படம் லாபத்தை நோக்கிச் சென்று விடும் என்கிறார்கள்.
சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து வந்துள்ள மற்றொரு வாரிசான வைஷ்ணவ் தேஜ் முதல் படத்திலேயே முத்திரை பதித்துவிட்டதாக விமர்சகர்கள் பாராட்டுகிறார்கள். விஜய் சேதுபதியின் நடிப்பும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இதன் மூலம் விஜய் சேதுபதிக்கு தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் குவியும் என்று தெரிவிக்கிறார்கள்.