ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 67வது தேசிய விருது பட்டியலில் பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. இந்தப்படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி அவார்டும், சிறந்த ஒலி வடிவமைப்புக்காக ரசூல் பூக்குட்டிக்கும் என இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. இந்த விருது கமிட்டி ஜூரிகளில் ஒருவரான கங்கை அமரன், தமிழ் படங்களுக்கு இத்தனை விருதுகள் கிடைத்தது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும் இந்த படங்களை தேர்வுசெய்த தனது அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“இந்தமுறை மற்ற ஜுரிகளிடம் எதற்காகவும் நான் வாதாடவில்லை. சிறந்த நடிகராக தனுஷையும், சிறந்த படமாக அசுரனையும் அவர்களே தேர்வு செய்தனர். பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தை பார்த்தவர்கள் ஸ்பெஷல் ஜூரி விருதுக்காக அந்தப்படத்தை தேர்வு செய்தனர். அவருக்கு எந்தப்பிரிவில் இந்த விருதை கொடுக்க போகிறீர்கள் என கேட்டேன்.. நடிப்பு, டைரக்சன், கதை என எல்லா பிரிவிலும் அவரது பங்களிப்பு சிறப்பாகவே இருக்கிறது. அதனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஸ்பெஷல் ஜூரி விருதை கொடுக்கிறோம் என கூறினார்கள்” என்று கூறியுள்ளார் கங்கை அமரன்.