தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் , சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளது. இதில் நடித்த தனுஷ், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இதற்காக வெற்றி மாறனுக்கு ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்து தாணு வாழ்த்து தெரிவித்தார்.
தேசிய விருது கிடைத்தது பற்றி வெற்றிமாறன் கூறியிருப்பதாவது: தேசிய விருது கிடைத்தது பெரிய ஊக்கமாக இருக்கிறது. என்னைப் போன்ற இயக்குனர்களுக்கு விருதுகள் எப்போதுமே ஊக்கத்தைக் கொடுக்கும். எப்போதுமே படம் இயக்கும்போது விருதுகளுக்காக இயக்குவதில்லை. அந்தப் படத்தின் கதைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என நினைத்து இயக்குவேன். நான் எந்த விருது வழங்கினாலும் பாலுமகேந்திராவுக்குத்தான் சமர்ப்பிப்பேன். இந்த விருதையும் அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
அசுரன் சமூக நீதிக்கான கதை, அது மக்களிடையே போய்ச் சேர வேண்டும் என்பது தான் முதல் எண்ணமாக இருந்தது. விருதுகள், தேசிய அளவிலான அங்கீகாரம், வணிகரீதியான வெற்றி உள்ளிட்டவை இந்த மாதிரியான படத்துக்கு மிக முக்கியமானது.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை தனுஷ் பெற்றிருப்பதிலும் மகிழ்ச்சி. 35 வயது நடிகர், 50 வயது கேரக்டரில் நடிப்பது என்பது தனுஷ் மாதிரியான நடிகரால் மட்டுமே முடியும். அதை ரொம்ப இலகுவாக நடித்தது ரொம்பவே ஸ்பெஷலான விஷயம். என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு வெற்றிமாறன் கூறியுள்ளார்.