தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தேசிய விருது பெற வேண்டும் என்பது இந்தியத் திரையுலகில் இருக்கும் பலருக்கும் ஒரு கனவாக இருக்கும். ஆனால், அந்த விருதும் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்துவிடாது. ஒரு சிலருக்கு மட்டுமே விருதுகள் இரண்டு முறைக்கு மேல் கிடைத்திருக்கின்றன. ஆனால், 20 வருட இடைவெளியில் மீண்டும் கிடைத்திருக்கிறது என்பது ஒரு ஆச்சரிய நிகழ்வு தான். அந்த ஆச்சரியத்திற்கச் சொந்தக்காரர் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன்.
அவர் முதன் முதலாக இயக்கி நடித்து 1989ம் ஆண்டு வெளிவந்த 'புதிய பாதை' படம் அந்த ஆண்டிற்கான சிறந்த பிராந்திய மொழிப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. அதற்குப்பிறகு பத்து ஆண்டுகள் கழித்து பார்த்திபன் இயக்கி நடித்து 1999ம் ஆண்டு வெளிவந்த 'ஹவுஸ்புல்' படம் அந்த ஆண்டிற்கான சிறந்த பிராந்திய மொழிப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.
அடுத்து இருபது வருட இடைவெளிக்குப் பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு தேசிய விருதைப் பெற்றுள்ளார் பார்த்திபன். 2019ம் ஆண்டு அவரது இயக்கம், நடிப்பில் வெளிவந்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்திற்கு சிறப்பு மென்ஷன் விருதைப் பெற்றுள்ளார்.
இவ்வளவு வருட இடைவெளியில் இந்தியத் திரையுலகில் வேறு யாராவது தேசிய விருதை வென்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.