2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

சிறிய பட்ஜெட்டில் படங்களை தயாரித்து பெரிய வெற்றியை கொடுத்து புதிய டிரண்டை உருவாக்கிய நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட். இதன் உரிமையாளராக தயாரிப்பாளர் சி.வி.குமார் இருக்கிறார். அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, சரபம், இன்று நேற்று நாளை என தொடர் வெற்றிகளை கொடுத்த நிறுவனம். தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குனராகி மாயவன், கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படங்களை இயக்கினார்.
இந்த நிலையில் இந்த நிறுவனம் தமிழில் பிரபலமான 3 நாவல்களை படமாக்குகிறது. பிரபல எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய ஆபரேஷன் நோவா, நான் ரம்யாவாக இருக்கிறேன், வேங்கை நங்கூரத்தின் ஜின் குறிப்புகள் ஆகிய நாவல்களை படமாக்கும் உரிமத்தை பெற்றுள்ளது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.