ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
அங்காடித்தெரு அஞ்சலி கடைசியாக அனுஷ்கா நடிப்பில் வெளியான நிசப்தம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியானது. அதையடுத்து தற்போது பிங்க் ஹிந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அஞ்சலி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், நான் எனது வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் திருப்தி அடைகிறேன். திரைப்படங்களின் எண்ணிக்கையை விட வேலையின் தரத்தை நான் நாடுகிறேன். அதனால் நான் படவாய்ப்புகளுக்காக தயாரிப்பாளர்களின் பின்னால் ஓடவில்லை. எனக்கேற்ற நல்ல வாய்ப்புகள் என்னைத் தேடி வரும் என்று வெயிட் பண்ணுகிறேன்.
மேலும், பிங்க் ஹிந்தி அப்படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்கவில்லை. ஆனால் பிங்க் படத்தை பார்த்திருக்கிறேன். படம் எனக்கு பிடித்தி ருந்தது. தெலுங்கு படத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உள்ளன என்று கூறும் அஞ்சலி, மகேஷ்பாபு, பவன் கல்யாண் போன்ற பெரிய நடிகர்களுடன் பணி புரிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் ஒரு மெகா படத்தில் ஒப்பந்த மாகப்போகிறேன். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார் அஞ்சலி.