மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் | பிளாஷ்பேக்: திரைப்படக் கல்லூரி மாணவர்கள் திரையில் ஏற்படுத்திய புரட்சி “ஊமை விழிகள்” | ரிக்ஷாக்காரன், நட்புக்காக, பூஜை - ஞாயிறு திரைப்படங்கள் | நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் தனது நடிப்பில் மூலம் அடுத்தடுத்த உயரங்களை தொடுகிறவர். சமீபத்தில்கூட மணிகர்னிகா படத்தில் நடித்தற்காக தேசிய விருது பெற்றார். இதுதவிர அவர் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவியில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.
ஜெயலலிதா போன்றே மாறி உள்ள அவரது நடிப்பை டீசரில், வெளியிடப்பட்ட பாடல்களில், புகைப்படங்களில் பார்த்து அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் எந்த ஒரு நடிகையும் அவரை பாராட்டவில்லை. இதுகுறித்து கங்கனா வருத்தத்துடன் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:
இந்தத் துறையில் நான் ஆதரிக்காத, பாராட்டாத ஒரு நடிகை கூட இல்லை. ஆனால், அவர்கள் யாருமே எனக்கு வாழ்த்தோ, ஆதரவோ கூறியதில்லை. அவர்கள் ஏன் எனக்கு எதிராகத் திரள்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களின் திரைப்படங்களின் திரையிடலுக்கு என்னைத் தொலைபேசியிலோ, நேரடியாகவோ வரச் சொல்வார்கள். நானும் செல்வேன். எனக்குப் பூக்கள் தந்து செல்லமே என்று கொஞ்சுவார்கள். ஆனால், எனது படத்தின் திரையிடல்களுக்கு அழைக்க முற்படும்போது எனது அழைப்புகளை எடுக்கவே மாட்டார்கள். இன்று நான் ஒவ்வொரு நாளும் அவர்களை ஆட்டுவிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள்தான். என்று கங்கனா எழுதியுள்ளார்.