தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு பான் இந்தியா நடிகராகிவிட்டவர் பிரபாஸ். தற்போது அவர் நடித்து வரும் படங்களை பான்-இந்தியா படமாகவே உருவாக்கி வருகிறார். மேலும், ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் திறமையான வளரும் இயக்குனர்களின் இயக்கங்களில் நடிக்கவும் முடிவு செய்து அதன்படி நடித்து வருகிறார்.
கன்னடத்தில் 'கேஜிஎப்' என்ற மிரட்டலான ஆக்ஷன் படத்தைக் கொடுத்த பிரஷாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தமிழ் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கப் போவதாக டோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது.
விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தை இயக்கிய பிறகு லோகேஷும் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். பிரபாஸ், லோகேஷ் இணைவது உறுதியானால் அடுத்த வருட மே மாதத்தில் படம் ஆரம்பமாகும் என்கிறார்கள். அதற்குள் கமல்ஹாசன் நடிக்க உள்ள 'விக்ரம்' படத்தை லோகேஷ் முடித்துவிடுவார் என்கிறார்கள்.
ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் இந்தக் கூட்டணியின் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்குச் செல்லும் போது மேலும் தகவல் வெளியாகலாம்.