ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி நடிக்கும் படம் தண்ணி வண்டி. சமஸ்கிருதி, பால சரவணன், தம்பி ராமய்யா, கன்னட நடிகை வினு தலால் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் மாணிக்க வித்யா கூறியதாவது:
தாயை இழந்த உமாபதி தந்தை தம்பி ராமய்யாவின் அரவணைப்பில் வளர்கிறார். ஆனால் எப்போதுமே அப்பனுக்கும், பிள்ளைக்கும் ஒத்துப்போகாது. தன்னை படிக்க வைத்து பெரிய ஆளாக்கவில்லை என்று தந்தை மீது உமாபதிக்கு கோபம். அவர் தனது நண்பன் பாலசரவணனுடன் இணைந்து கல்யாண வீடு, மற்றும் ஓட்டல்களுக்கு சிறிய வண்டியில் தண்ணிர் சப்ளை செய்கிறவர். பகல் முழுக்க கடுமையாக வேலை செய்துவிட்டு, ராத்திரியானால் குடித்து விட்டு ரகளை செய்வார்கள்.
கதை களம் மதுரை. புதிதாக வருகிறார் மாவட்ட வருவாய் அலுவலர் வினுதலால். அவர் பக்கா நேர்மையான அதிகாரி. அதிரடியான அதிகாரியும்கூட அவருக்கு ஒரு வீக்னஸ் இருக்கிறது. திருமணத்தில் நம்பிக்கை இல்லாத அவர் அதிக ஆண் நண்பர்களை விரும்புவார். அவர்களுடன் ஜாலியா இருந்து விட்டு போரடிக்கும்போது கழற்றி விட்டு விடுவார்.
அவர் ஒரு ஆணுடன் அந்தரங்கமாக இருக்கும் வீடியோ ஒன்று உமாபதிக்கு கிடைத்து விடுகிறது. வினு தலாலால் பாதிக்கப்பட்ட மதுரை பெரும்புள்ளிகள் அவரை பழிவாங்க காத்திருக்கிறார்கள். இந்த வீடியோ அவர்கள் கைக்கு கிடைத்தா, அதை வைத்துக் கொண்டு தண்ணி வண்டி உமாபதி என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. என்றார்.