கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா தயாரிப்பாளராகவும் உள்ளார். இதற்கு முன்பு தமிழில் 'அமரகாவியம், ஜீவா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' ஆகிய படங்களையும், மலையாளத்தில் சில படங்களையும் தயாரித்துள்ளார்.
தற்போது ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் தயாரிப்பாளராக மீண்டும் களமிறங்கி உள்ளார். அரவிந்த்சாமி, குஞ்சக்கோ போபன் நடிக்கும் இப்படத்திற்கு தமிழில் 'ரெண்டகம்' என்றும் மலையாளத்தில் 'ஒட்டு' என்றும் பெயர் வைத்துள்ளார்கள். இப்படங்களின் முதல் பார்வையை இன்று வெளியிட்டுள்ளார்கள்.
தற்போதைய நடிகர்கள் பலரும் சொந்தப் படத் தயாரிப்பில் அதிகமாகவே ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் படத் தயாரிப்பை நிறுத்திவிட்டார்கள். சிலர் மட்டுமே தொடர்ந்து தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் ஆர்யா படம் தயாரிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடித்து முடித்துள்ளார்.