தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு-2 என பல படங்களில் நாயகியாக நடித்தவர் நிக்கி கல்ராணி. ஓட்டல் உரிமையாளர் ஒருவர் தன்னிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்து விட்டதாக பெங்களூர் அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் இவர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், கோரமங்களா பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் நிகில். இவரது ஓட்டலில் 2016ம் ஆண்டு ரூ. 50 லட்சம் முதலீடு செய்தேன். அதற்காக அவர் எனக்கு மாதந்தோறும் ரூ. 1 லட்சம் தருவதாக கூறியிருந்தார். ஆனால் அவர் இப்போதுவரை மாதந்தோறும் ஒரு லட்சம் தரவில்லை. நான் கொடுத்த ரூ. 50 லட்சத்தையும் திருப்பித்தர மறுக்கிறார். அதனால் அவர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார் நிக்கி கல்ராணி. இந்த புகாரின் அடிப்படையில் ஓட்டல் உரிமையாளர் நிகிலிடம் அம்ருதஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.