ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் ஆண்டனி நடித்துள்ள “கோடியில் ஒருவன்” மற்றும் “ “காக்கி” படங்கள் ரிலீஸிற்கு தயாராக உள்ளன. இதை இனிபினிட்டி பிலிம்ஸ் வெஞ்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்போது மூன்றாவது முறையாக விஜய் ஆண்டனியுடன் ஒரு புதிய படத்தில் இந்நிறுவனம் இணைகிறது. பரபர திரில்லராக தயாராகவுள்ள இப்படத்தை தமிழ்படம் புகழ் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்குகிறார்.
விஜய் ஆண்டனி கூறியதாவது : இயக்குநர் அமுதன் என்னிடம் இக்கதையை சொன்ன போது முற்றிலும் வாயடைத்து போனேன். தமிழ் படங்களின் குறைபாடுகளை கிண்டலடில்கும், ஸ்பூப் வகை படங்களிலிருந்து முற்றிலும் வேறாக ஒரு திரில்லர் கதையை அவர் படைத்திருந்தார். இக்கதையை அவர் கூறும்போது அவர் முழுதுமாக ஒளிர்ந்து கொண்டிருந்தார். அவர் கதையுடன் அந்தளவு ஒன்றியிருந்தார். இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு மிகச்சிறந்த திரில்லர் இயக்குநராக அவர் கொண்டாடப்படுவார் என்றார்.
அமுதன் கூறியதாவது : விஜய் ஆண்டனியின் புதிய படத்தில் இணைந்து, பணியாற்றும் செய்தியை அறிவிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். அதிலும் மிகச் சிறந்த தயாரிப்பு நிறுவனமான இனிபினிட்டி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைவது மகிழ்ச்சி. நகைச்சுவை படங்களிலிருந்து மாறுபட்டு இம்முறை ஒரு திரில்லர் திரைப்படத்தை இயக்கவுள்ளேன். இந்நேரத்தில் என் மீது நம்பிக்கை வைத்த நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி சொல்லிகிறேன். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளோம். படத்தின் தலைப்பு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.