இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடுமையாகி வரும் நிலையில் நேற்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், சினிமா தியேட்டர்களில் இரவு நேரக் காட்சிகள் நடைபெறவில்லை. அதோடு மாலை நேரக் காட்சிகளும் நடைபெற முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக மாநகரம், நகரங்களில் மாலை நேரக் காட்சிகள் மாலை 6.30 மணி அல்லது இரவு 7.30 மணிக்கே ஆரம்பமாகும். அப்படி ஆரம்பிக்கும் போது படம் முடிவடைய இரவு 9.30 அல்லது 10 மணி ஆகிவிடும். அதற்கு மேல் படம் பார்க்க வருபவர்கள் தற்போதைய ஊரடங்கு இரவு 10 மணிக்குள் வீடு திரும்ப முடியாது. அதனால் மாலை நேரக் காட்சிகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
காலை காட்சியை 10 மணிக்கும், மதியக் காட்சியை 2 மணிக்கும் மாலைக் காட்சியை 6 மணிக்கும் முன்பாக ஆரம்பித்தால் தான் இரவு வீடு திரும்புபவர்களுக்கும் வசதியாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு இன்று முதல் தியேட்டர்களில் காட்சிகளை மாற்றியமைப்பார்களா அல்லது இரண்டு காட்சிகளே போதும் என்ற முடிவுக்கு வருவார்களா என்பது இன்று தான் தெரியும்.
நேற்றே தியேட்டர்களில் மக்கள் வருகை குறைந்துவிட்டது என்கிறார்கள். தியேட்டர்களைத் திறக்க சங்கத்தினர் முடிவு செய்தாலும் மக்கள் வந்தால் தான் திறந்து வைக்க முடியும். அவர்கள் வரவில்லை என்றாலும் பழையபடியே காட்சிகளை ரத்து செய்யத்தான் வேண்டும். கொரோனா காரணமாக மற்ற தொழில்களை விட சினிமாத் தொழில்தான் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.