ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடுமையாகி வரும் நிலையில் நேற்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், சினிமா தியேட்டர்களில் இரவு நேரக் காட்சிகள் நடைபெறவில்லை. அதோடு மாலை நேரக் காட்சிகளும் நடைபெற முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக மாநகரம், நகரங்களில் மாலை நேரக் காட்சிகள் மாலை 6.30 மணி அல்லது இரவு 7.30 மணிக்கே ஆரம்பமாகும். அப்படி ஆரம்பிக்கும் போது படம் முடிவடைய இரவு 9.30 அல்லது 10 மணி ஆகிவிடும். அதற்கு மேல் படம் பார்க்க வருபவர்கள் தற்போதைய ஊரடங்கு இரவு 10 மணிக்குள் வீடு திரும்ப முடியாது. அதனால் மாலை நேரக் காட்சிகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
காலை காட்சியை 10 மணிக்கும், மதியக் காட்சியை 2 மணிக்கும் மாலைக் காட்சியை 6 மணிக்கும் முன்பாக ஆரம்பித்தால் தான் இரவு வீடு திரும்புபவர்களுக்கும் வசதியாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு இன்று முதல் தியேட்டர்களில் காட்சிகளை மாற்றியமைப்பார்களா அல்லது இரண்டு காட்சிகளே போதும் என்ற முடிவுக்கு வருவார்களா என்பது இன்று தான் தெரியும்.
நேற்றே தியேட்டர்களில் மக்கள் வருகை குறைந்துவிட்டது என்கிறார்கள். தியேட்டர்களைத் திறக்க சங்கத்தினர் முடிவு செய்தாலும் மக்கள் வந்தால் தான் திறந்து வைக்க முடியும். அவர்கள் வரவில்லை என்றாலும் பழையபடியே காட்சிகளை ரத்து செய்யத்தான் வேண்டும். கொரோனா காரணமாக மற்ற தொழில்களை விட சினிமாத் தொழில்தான் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.