ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
கொரோனா பரவல் காரணமாக பல பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன. தென்னிந்தியத் திரையுலகத்தின் முக்கிய படப்பிடிப்பு நகரமாக ஐதராபாத் நகரம் இருந்து வருகிறது. அங்கு தமிழ், கன்னடப் படங்களின் படப்பிடிப்புகளும் அதிகம் நடக்கும்.
கொரோனா பரவல் காரணமாக 50 பேர் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என தெலுங்கு பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் அறிவித்துள்ளது. அதோடு கொரோனா பரவல் பயம் காரணமாக மகேஷ்பாபு நடித்து வந்த 'சர்க்காரு வாரி பாட்டா', சிரஞ்சீவி நடித்து வந்த 'ஆச்சார்யா' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. தற்போது ராஜமவுலி இயக்கி வரும் பிரம்மாண்டப் படைப்பான 'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படப்பிடிப்பும் இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் ஆரம்பமாகி நடந்து வந்தது. அப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா, தொடர்ந்து நடைபெறுகிறதா என படக்குழு தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வரும் விஜய் படத்தின் படப்பிடிப்புக் குழுவினர் இருவருக்கும் கொரானோ தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர்களைத் தனிமைப்படுத்திவிட்டு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கொரோனா பரவல் வேகம் என்பதால் சினிமா படப்பிடிப்புகள் விரைவில் முழுவதுமாக நிறுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம் என திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள்.