பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. தெலுங்கில் அவர் வில்லனாக நடித்து வெளிவந்த 'உப்பெனா' படம் பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. அதற்கு முன்பு வெளியான 'மாஸ்டர்' படத்தின் மூலமும் தெலுங்கு ரசிகர்களிடம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. சிரஞ்சீவி நடித்த 'சைரா' படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அங்கு அறிமுகமானவர் விஜய் சேதுபதி.
'உப்பெனா' படத்திற்குப் பிறகு அவரைத் தேடி பல வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால், அவற்றை ஒத்துக் கொள்ள மறுத்து வருகிறாராம். “தற்போது தெலுங்கு கற்று வருகிறேன். அதில் நன்றாக பேச ஆரம்பித்ததும், தெலுங்கில் அதிகம் நடிக்கிறேன்,” என அவரைத் தேடி வரும் தெலுங்குத் திரையுலகினரிடம் தெரிவிக்கிறாராம்.
விஜய் சேதுபதி தற்போது 'மும்பை சகா' என்ற ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள முக்கிய நடிகர்களில் சீக்கிரமே 'பான் இந்தியா' நடிகராக மாறிவிடுவார் போலிருக்கிறது.