இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அல்லு அர்ஜூன் நடிப்பில் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் தயராகும் படம் புஷ்பா. இதில் ராஷ்மிகா ஹீரோயின். பகத் பாசில் வில்லன். இவர்கள் தவிர ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், வெண்ணிலா கிஷோர் உள்பட பலர் நடிக்கிறார்கள். சுகுமார் இயக்குகிறார்.
படத்தில் நடித்திருப்பது பற்றி ரசிகர்களுடன் வீடியோ சாட்டில் பேசினார் ராஷ்மிகா. அப்போது அவர் கூறியதாவது: புஷ்பா மிகவும் நன்றாக வளர்ந்து வருகிறது. மும்முரமாக, அதே சமயம் மிகவும் பாதுகாப்பான முறையில் படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன, படத்தை நீங்கள் அனைவரும் மிகவும் ரசிப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
சுகுமார் இயக்கம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு, அல்லு அர்ஜுன் கதாநாயகன். இதை விட வேறென்ன வேண்டும் ரசிகர்களை மகிழ்விப்பதற்கு?. என்றார். அல்லு அர்ஜூன் எப்படிபட்டவர் உங்கள் அனுபவம் எப்படி என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "அல்லு அர்ஜூன் மிகவும் எளிமையானவர், இனிமையானவர்" என்றார்.
இவ்வாறு ராஷ்மிகா தெரிவித்துள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் 13ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.