ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தால் தங்கள் திரையுலகத்திற்கும் புதிதாக நன்மைகள் கிடைக்காதா என திரையுலகினர் எதிர்பார்த்து வருகிறார்கள். முதல்வராகப் பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினை திரையுலக சங்கத்தினர் சந்திக்க ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் ஏற்கெனவே வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலும் தங்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள்.
முந்தைய ஆட்சியில் தியேட்டர்களுக்கான தமிழக அரசு விதித்துள்ள உள்ளாட்சி வரியை நீக்க வேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக வைத்திருந்தார்கள். ஆனால், அதை முந்தைய அரசு கடைசி வரை நீக்கவேயில்லை. தற்போது புதிய அரசு அமைய உள்ள நிலையில் அதை கோரிக்கையாகக் கேட்டுள்ளார்கள்.
தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்கு ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி உண்டு. டிக்கெட் கட்டணத் தொகைக்கேற்ப அது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, டிஜிட்டல் நிறுவனங்களுடன் அடிக்கடி தயாரிப்பாளர்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். துறைக்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டு பதவியேற்றதும் அவரிடம் தங்களது கோரிக்கைகள் குறித்து திரையுலகினர் தனித்தனியாக சந்தித்து கேட்க திட்டமிட்டுள்ளனராம்.
தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படுவதற்குள் தங்களது சில கோரிக்கைகள் நிறைவேறினால் நல்லது என நினைக்கிறார்கள்.