தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்தில் இயக்குனர் கெளதம் மேனனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், தேசிங்கு பெரியசாமிக்கு கால் பண்ணி, படம் மிகவும் சிறப்பாக இருந்ததாக சொல்லி அவரை வாழ்த்தியவர், தனக்கும் ஒரு கதை ரெடி பண்ணுமாறு கேட்டுக் கொண்டார். இதுகுறித்த ஆடியோ ஒன்றும் முன்பு சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.
அதனால் அண்ணாத்த படத்தை முடித்ததும் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கயிருப்பதாக தொடர்ந்து செய்திகள் பரவிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் தற்போது தனது டுவிட்டரில் அதுகுறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் தேசிங்கு பெரியசாமி.
அவர் கூறுகையில், என்னுடைய அடுத்த படம் குறித்து வெளியாகி வரும் செய்திகள் உண்மையில்லை. ஆனால் எனது அடுத்த படம் என்ன என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும். அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. பாதுகாப்புடன் இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த தகவலை அடுத்து ரஜினியின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.