மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வக்கீல் சாப் என்கிற படம் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த பட தயாரிப்பாளருக்கு தற்போது ஒரு மொபைல் நம்பரால் புதிய சிக்கல் எழுந்துள்ளது. கதைப்படி படத்தில் வில்லன் ஆட்களில் ஒருவர், கையில் வைத்திருக்கும் மொபைல் போனுக்கு, அந்த படத்தில் நடித்துள்ள அஞ்சலியின் மார்பிங் செய்யப்பட்ட போட்டோ ஒன்று, வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கப்படும்.. அந்த எண் திரையில் காட்டப்படும்போது பார்ப்பவர்களுக்கு பளிச்சென தெரியும் வகையில் இருந்தது.
இந்த நிலையில் அந்த தொலைபேசி எண் தனக்குரியது என்றும், அந்த நம்பரை தனது அனுமதி இல்லாமல் படத்தில் பயன்படுத்தியதால், தொடர்ந்து தனக்கு அருவருக்கத்தக்க வகையில் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருப்பதாகவும் பஞ்சகுட்டா பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவர் தயாரிப்பாளர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் சுதாகரின் வழக்கறிஞர் மூலமாக தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.