33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் |
'இந்தியன் 2' பட விவகாரத்தில் இயக்குனர் ஷங்கர், தயாரிப்பு நிறுவனமான லைகா இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தோல்வி ஏற்பட்டு வழக்கு மீண்டும் நீதிமன்றம் பக்கமே சென்றது.
இந்தியன் 2' படத்தை முடிக்கும் வரையில் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற லைகாவின் கோரிக்கை நீதிமன்றம் ஏற்கவில்லை. மேலும், தயாரிப்பு நிறுவனம் மீதே குற்றச்சாட்டுகளை வைத்தார் ஷங்கர்.
அதனால் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ள லைகா நிறுவனம் ஷங்கர் மீது அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் ஷங்கர் மீது புகார் கொடுத்துள்ளார்களாம். தங்களது 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுத்த பிறகே அவர் தெலுங்கு, ஹிந்தியில் ஒப்பந்தமாகியுள்ள படங்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம்.
'இம்சை அரசன் 24ம் புலிகேசி' பட விவகாரத்தில் வடிவேலு மீது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்து அவரை படங்களில் நடிக்க வைக்க விடாமல் மறைமுக அழுத்தம் கொடுத்தவர் ஷங்கர் என கோலிவுட்டில் சொல்கிறார்கள். அதே பார்முலாவைப் பயன்படுத்தி ஷங்கரையும் தடுக்க வேண்டும் என லைக்கா நிறுவனம் முயல்கிறதாம்.