இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் கடுமையாக உள்ளது. கடந்த வருட கொரோனா தொற்றின் முதல் அலை ஏற்படுத்திய தாக்கத்தை விட இரண்டாவது அலை ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
கடந்த வருட கொரோனாவிற்கே தியேட்டர்களை சுமார் 8 மாதங்கள் வரை மூடி வைத்திருந்தார்கள். இந்த இரண்டாவது அலையில் கடந்த 20 நாட்களாக தியேட்டர்களை மூடி வைத்திருக்கிறார்கள். இந்த அலையின் தாக்கம் ஜுலை வரையிலும் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
அதன்பிறகு கொரோனா தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தால் தான் அதற்கடுத்த சில மாதங்களிலாவது தியேட்டர்களைத் திறக்க நடவடிக்கை எடுப்பார்கள். ஏற்கெனவே கடந்த வருடம் 8 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் திறக்கப்பட்டாலும் ஓரிரு படங்கள் மட்டும் தான் லாபத்தைத் தந்தன.
பல தியேட்டர்களை திறக்காமலேயே வைத்திருந்தார்கள். இந்த வருடமும் அப்படிய நீடித்தால் நூற்றுக்கணக்கான தியேட்டர்களை நிரந்தரமாக மூடும் அபாயம் இருப்பதாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். நேரடியாகவும் மறைமுகமாவும் சினிமா தொழிலையும், தியேட்டர்களையும் நம்பி பல குடும்பங்கள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
முதல் அலையின் போதே மீள முடியாத தியேட்டர்கள் இந்த இரண்டாவது அலையில் மீள்வது அவ்வளவு எளிதல்ல என்பதுதான் நிதர்சனமான உண்மை.