முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' | ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் | சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் |
பாலிவுட் நடிகர் சோனு சூட் கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டதில் இருந்தே ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். அவரது அந்த உதவி இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அந்தவகையில், கொரோனா இரண்டாவது அலையின்போது பலருக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி வரும் சோனு சூட், சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் அவசரமாக தேவைப்படுகிறது என்கிற தகவல் தனக்கு கிடைத்ததும் உடனடியாக அனுப்பி வைத்து 30 உயிர்களை காப்பாற்றியுள்ளார்.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் ரீமா சுவர்ணா மற்றும் சிகிச்சை கொடுத்த மருத்துவமனை நிர்வாகமும் சரியான நேரத்தில் உதவி செய்து 30 பேரை காப்பாற்றியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.