தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் சம்யுக்தா ஹெக்டே. கன்னட பிக்பாசில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். தமிழில் வாட்ச்மேன், கோமாளி, பப்பி படங்களில் நடித்தார்.
சம்யுக்தா பெங்களூருவில் பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்யுக்தாவின் பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. "என் பெற்றோர்கள் தான் எனக்கு உலகம் அவர்களுக்காக பிரார்த்தியுங்கள்" என்று உருக்மான வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதோடு பெற்றோர்கள் முதியவர்கள் என்பதால் அவர்களை மருத்துவமனையில் சேர்க்காமல் டாக்டர்களின் ஆலோசனையின்படி வீட்டிலேயே அவர்களை தனிப்படுத்தி வைத்து கவனித்து வந்தார். பெற்றோர்கள் குணமாகி வரும் நிலையில் சம்யுக்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; உங்களின் பிரார்த்தனைகளால் எனது பெற்றோர் நலம் பெற்று வருகிறார்கள். டாக்டர்கள் ஆலோசனைப்படி எனக்கு பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. நானும் அதனை பாசிட்டிவாகவே எடுத்துக் கொண்டேன்.
என் பெற்றோர்கள் குணமடைந்ததே எனக்கு புதிய உலகத்தில் பிரவேசிப்பது போல இருந்தது. நானும் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பி வருவேன். என்று கூறியிருக்கிறார். சம்யுக்தாவுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி நம்பிக்கையூட்டி வருகிறார்கள்.